(புதியவன்)
சித்திரை புத்தாண்டுக்காக நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தந்திருந்திருந்தனர்.
இவர்கள் நேற்றும் (16) இன்றும் (17) கொழும்பு நோக்கி செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றும் இன்றும் கொழும்பு நோக்கி செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஹட்டன் பேருந்து டிப்போவின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் 49 பேருந்துகளும், இன்று 12 மணி வரை 29 பேருந்துகளும் 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் இன்றைய தினம் வருகை தராததால் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து பயணிகள் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்கள் வேலைக்கு செல்வதற்காக புதிய பேருந்துகள் சேவைகள் ஈடுபடுத்தியிருப்பதாக தெரிவித்த போதிலும் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பிள்ளைகளுடன் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பலர் தெரிவித்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.