புதியவன்.
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்மித்த பகுதியில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேகநபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 840மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்,4 கிராம்கேரளா கஞ்சா மற்றும் 540 மில்லி கிராமும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றிய 39வயது மதிக்கதக்க சந்தேக நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தே நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.