(யோகி)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் மாலை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது அங்குள்ள மக்களின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் விதமாக, கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்நடைபெற்றன. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.