(இனியபாரதி)
துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை(10) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஜெகசீலன் சங்கீதா (வயது- 44) என்பவராவார்.
வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சும்மான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின், பெண்ணுறுப்புக்கு அண்மையாக தொடைப்பகுதியில் நகக் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளதாக மருதங்கேணிப் பொலிருக்கு அவர் அறிக்கையிட்டுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.