(யோகி)
கிளிநொச்சி நாதன் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் (28) இன்று பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்தார்.
அவர் அங்கு தெரிவித்ததாவது.
18இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் அரசதலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்
காலத்திற்கு காலம் அரசதலைவர் தேர்தலின் போது பல வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய போதும் சிலர் வெற்றி பெற்றார்கள் .எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கு அரசதலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பது தனது தனிப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அங்கு குறிப்பிட்டிருந்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.