(புதியவன்)
பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்கு வரவுள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 15 வருடப் பூர்த்தியை முன்னிட்டு லண்டனை தளமாகக்கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அன்றைய தினம் மன்னிப்புச் சபையில் கொழும்பு அலுவலக செயற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் அவர், மறுநாள் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்கு பயணம் செய்யவுள்ளார்.
அங்கு சில முக்கிய இரகசிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதுடன் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதுடன், நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
அதேவேளை அக்னெஸ் கலமார்ட் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே அரச தலைவர் செயலகத்திடம் கோரிய போதும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.