உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது!!
(ஆதவன்)
தேக்கவத்தையிலுள்ள விடுதியில், 15 வயது சிறுமி போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை, தேக்கவத்தையை அண்டியுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர்,போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.