(புதியவன்)
புசல்லாவை டெல்டா தெற்கு பழைய தோட்டத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நிகழ்வுகள் கடந்த 27ம் திகதி ஆரம்பமாகி இன்று 31ம் திகதி மஞ்சள் நீராட்டு நிகழ்வுடன் நிறைவுக்கு வந்தது. இந்நிகழ்வில் நாக லயத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் குண்டர்களுடன் களமிறங்கி மஞ்சள் நீராட்டு நிகழ்வினை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சமரசமாக பேசும் முயற்சியில் ஈடுபட்ட பழைய தோட்ட பொதுமக்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சுமார் 6க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு பல வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
புசல்லாவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.