புதியவன்
மலையாள நடிகையான நவ்யா நாயர், தமிழில் அழகிய தீயே, இராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, மாயக்கண்ணாடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்குச் சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட நவ்யா நாயர், இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.
தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை விற்பனை செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இதன்படி விற்பனையையும் தொடங்கினார். சில புடவைகளின் விலையை குறிப்பிட்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் அவரை இது பேராசை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இதன் மூலம் கிடைத்த பணத்தை பத்தனாபுரத்திலுள்ள காந்திபவனுக்கு அவர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் காந்திபவன் பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா நன்கொடையையும் அவர் வழங்கியுள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.