செல்வன்
மலரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் - சிங்கள ( சித்திரை) புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், லைக்கா ஞானம் பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு நன்கொடையாளர்களின் நிதி அன்பளிப்புடன் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதன் ஆரம்ப போட்டிகளாக மாபெரும் மரதம் ஓட்டப்போட்டி மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் என்பன இன்றைய தினம் காலை 6 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமூலை டைமன் விளையாட்டு மைதான முன்றலில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வீர வீராங்கனைகள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் புதுவருட பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தலைமை விருந்தினராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன், கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வினை ஆரம்பித்தும் வைத்தார்.
இந்நிகழ்வில் சித்திதைப் புத்தாண்டின் பண்பாட்டு விழுமியங்களை மாதிரி வடியில் உருவாக்கியிருந்ததுடன் ஆற்றுகையினையும் நிகழ்த்தியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.ஜெயகாந், வன்னி படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், 59 ஆவது படையணியின் தளபதி, 64 ஆவது படையணியின் தளபதி, மதகுருமார்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வெற்றிப்பதக்கங்களும் வெற்றிக்கேடயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.