வவுனியா, சுந்தரபுரத்திலுள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியர் நேற்றுக் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதாகத் தெரிவித்து மாணவன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியமைக்கான காரணத்தைக் கேட்டிருந்தார். ஆசிரியரின் பதிலில் பெற்றோர் திருப்தியடையவில்லை. இந்த நிலையில் மருத்துவமனைப் பொலிஸார் ஊடாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.நேற்றைய தினமே அவர் நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.