வரலாற்றில் இன்று – 28.04.2024
வரலாற்றில் இன்று – 28.04.2024

(புதியவன்)

ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார்.
1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.
1603 – டச்சுத் தளபதி செபால்ட் டெ வீர்ட் என்பவனுக்கும் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[1]
1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது.
1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட ஏழாவது மாநிலமானது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1796 – பிரெஞ்சு எல்லையை நடுநிலக் கரையோரப் பகுதி வரை விஸ்தரிக்க முதலாம் நெப்போலியனுக்கும், சாந்தீனிய இராச்சியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.[2]
1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1949 – பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் மானுவல் குவிசோனின் மனைவி அவுரோரா குவிசோனும், அவரது மகள், மற்றும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 – சப்பானுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் தாய்பெய் நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாம் சீன-சப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட சப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1967 – வியட்நாம் போர்: முகம்மது அலி ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையில் சேர மறுத்ததை அடுத்து, அவரது குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.
1969 – சார்லஸ் டி கோல் பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1970 – வியட்நாம் போர்: கம்போடியாவில் அமெரிக்கப் படைகள் கம்யூனிச சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1975 – வட வியட்நாம் இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிய போது, தெற்கு வியட்நாமின் இராணுவத் தலைவர் காவோ வான் வியென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
1978 – ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து சுவீடனில் உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட கதிர்வீச்சு பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது.
1988 – அவாயில், அலோகா ஏர்லைன்சின் போயிங் 737 வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.
1995 – பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.


பிறப்புகள்


1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1831)
1774 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844)
1854 – ஹெர்த்தா அயர்டன், போலந்து-பிரித்தானியப் பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1923)
1900 – ஜான் ஊர்த், டச்சு வானியலாளர் (இ. 1992)
1906 – கியேடல், செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978)
1906 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983)
1908 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974)
1923 – இரா. செழியன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்
1924 – கென்னத் கவுண்டா, சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர்
1926 – ஹார்ப்பர் லீ, அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
1926 – எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016)
1937 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (இ. 2006)
1948 – டெர்ரி பிராச்செத், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2015)
1981 – ஜெசிகா ஆல்பா, அமெரிக்க நடிகை
1987 – சமந்தா ருத் பிரபு, இந்தியத் திரைப்பட நடிகை


இறப்புகள்


1854 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (பி. 1786)
1918 – காவ்ரீலோ பிரின்சிப், யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894]])
1942 – உ. வே. சாமிநாதையர், தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855)
1945 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883)
1955 – தி. வே. சுந்தரம், இந்தியத் தொழிலதிபர் (பி. 1877)
2000 – சாலினி இளந்திரையன், தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி. 1933)
2005 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959)
2006 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
2007 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912)


சிறப்பு நாள்


தொழிலாளர் நினைவு நாள் (ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

213 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.