ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவருடன் நெருக்கமான உறவை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருவரே தமிழ்த்தரப்பிலிருந்து ரணிலை பகிரங்கமாக ஆதரித்தவர் அவருடன் விக்னேஸ்வரனும் இணைந்து ஆதரித்து வருகின்றார். இப்படிப்பட்ட விக்னேஸ்வரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது அதை ஆதரித்தார். அதற்கான சில முன்னெடுப்புகளையும் அவர் மேற்கொண்டவர். அவரின் இந்த நடவடிக் கைகள் தொடர்பில் சில சில சந்தேகங்களை 'உதயன்' வடித்தமிழ் மொனுவேகத்தில் முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தது. என்ற என்ற கருத்தியலை போன்று இருந்து அதைச் சிதைப்பதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் இன்னமும் நீடிக்கவே செய்கின்றது. இந்த நிலையில், 'பலர் பொது வேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு. பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு மக்களின் ஒற்றுமை பேணப்படும், எமது எதிர்பார்ப்புகள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் 1. இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது' என்று கிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றியிருக்கிறார். சி.வி.விக்னேஸ்வரன் பேணி வருகின்றார்.
தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதை எதிர்க்கும் சில தரப்புகள் முன்வைத்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதைப் போன்று விக்னேஸ்வரனின் கருத்து அமைந்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துபவர்கள் தமது இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவாக சிங்கள வேட்பாளரை ஆதரிப்பார்கள். எனவே தேர்தல் புறக்கணிப்புத்தான் சரியானது என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடு சரியென்பதுபோலவும், தமிழ்ப் பொது வேட்பாளர், சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகவே இருப்பார் என்பதைப் போலவுமே விக்கினேஸ்வரனின் கருத்துகள் இருக்கின்றன.
ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் மிகக்கடுமையாக உழைக்கும் சிவில் சமூகத்தி னராக இருக்கலாம் அல்லது அரசியல் தரப்புக்களாக இருக்கலாம் அவர்கள் எவரிடமும் இப்படி தமிழ்ப் பொதுவேட்பாளர், சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகச் செயற்படுவது போன்ற யோசனைகளோ, திட்டங்களோ, எண்ணங்களோ இல்லை. இவ்வாறானதொரு நிலையில் விக்னேஸ்வரன் இப்படியொரு கருத்தை பொதுவெளியில் முன்வைத்ததன் மூலம் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருத்தியல் மீதும், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக உளமாரப்பாடுபடும் சிவில் அமைப்புகள் மத்தியிலும், மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டிருக்கின்றார். சிலவேளைகளில் அவரது தனிப்பட்ட விருப்பாக இந்த யோசனை இருந்தால், அதைக்குறித்து அவர் இதுதொடர்பில் செயற்பாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தி, அவர்களின் ஆலோசனை களைக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து இப்படிப் பகிரங்கமாக பொதுவேட்பாளர் என்ற கருத்தியல் மீது சந்தேகத்தை உண்டுபண்ணும் விதமாக பேசுவதென்பது ஆரோக்கியமான விடயமல்ல.
அரசியல்வாதிகள் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை தனித்துக் கையான முயன்றால் நிலைமை இவ்வாறு சிக்கலுக் குரியதாகவே மாறும். சிவில் அமைப்புகள் உட்பட சகல தரப்பின் ஆலோசனையுடனுமே இவ்வாறான நிலைப்பாட்டை முன்வைக்கவேண்டும். ஏனெனில் தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் பல தடவைகள் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பேசப்பட்டாலும், சில முயற்சிகள் முன்னரும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இம்முறையே அதை எல்லோரும் ஒன்றிணைந்து, எமது உரிமைக்குரலின் ஓர் அடையாளமாக நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் காணப்படுகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தை குழப்புவதற்கு பல்வேறு தரப்புகளும் நிச்சயம் பிரயத்தனத்தை மேற் கொள்ளவே செய்வார்கள். பொதுவேட்பாளர் விடயத்தால் பாதிக்கப்படப்போகும் சிங்களத் தரப்புகள் நிச்சயம் தங்கள் கைப்பொம்மைகள் ஊடாக இதைக் குழப்பியடித்து தோற்கடிக்கவே முயற்சிப்பார்கள். எனவே அரசியல்வாதிகள் கருத்துகளை முன்வைக்கும்போது அவதானம் தேவை. சிவில் சமூகத்தினரும் இதுதொடர்பில் பரந்தளவிலான மக்கள் அறிவூட்டலைச் செய்யும்போது, தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான சந்தேகங்கள் தீரும். இதன்மூலம் குழப்பம் விளைவிக்கும் தரப்புகளின் நோக்கத்தை தோற்கடிக்கலாம்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.