(ஆதவன்)
தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுபோன்ற குற்றங்களை மேற்கொள்பவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவரின் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்படும்.
தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றவாளிக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்புக் கருவிகள் நீதிவானின் உத்தரவு மூலம் அரசுடைமையாக்கப்படும்.
இத்தகைய ஏற்பாடுகளுடன் தொலைத்தொடர்பு திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.