ஆதவன்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் கஞ்சி பருகிய சிரட்டையை நாடாளுமன்றத்தின் நூதனசாலையில் வைக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்விலேயே, முள்ளிவாய்க்கால் சிரட்டையை சபாநாயகரிடம் சமர்ப்பித்து இந்தக்கோரிக்கையை சிறீதரன் முன்வைத்தார்.
“நான் இந்தச் சிரட்டையை சபாபீடத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன். இதுதான்முள்ளிவாய்க்காலில் கஞ்சி வழங்கிய சிரட்டை, குடிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கவில்லை, காய்ச்சுவதற்கு அரிசி இல்லை, உப்பு இல்லை, தண்ணீர் எடுப்பதற்குக்கூட பிரச்சினை, இந்த நிலையில் வெறும் உப்பில்லாத கஞ்சியைக் காய்ச்சி இந்த சிரட்டையிலேதான் குடித்து மக்கள்உயிர்தப்பினர். முள்ளிவாய்க்கால் அடையாளமாக இந்தச் சிரட்டையைசபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். தயவுசெய்து, நாடாளுமன்றத்தின் நூதனசாலையில் இதை வையுங்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதன்போது தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.