புதியவன்
இங்கிலாந்தில் இருந்து நேற்று கனடா நோக்கி சென்ற ஏயார் வானூர்தியில் அதன் அவசரகால வெளியேற்ற கதவைத் திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடுவானில் வானூர்தி பறந்து கொண்டிருந்த போதே வயதான அந்த பயணி கதவைத் திறக்க முற்பட்டுள்ளார்.
எனினும் டொரோன்டோ வானூர்தித்தளத்தில் வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏனைய பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணைகளை நடத்தினர்.
அந்த பயணி ஏதோ ஒரு நெருக்கடியிலும் மனக்குழப்பத்திலும் இருந்ததாகவும் வேண்டுமென்றே அவர் வானூர்தியின் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்தாக டொரோன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், வயதான அந்த பயணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.(ஒ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.