வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக வெப்பம் வாட்டியெடுத்து வருகின்றது. வெப்பத் தணிப்புக்காகவும், வெப்பப் பேரிடரின் ஆபத்தம் சங்களை எதிர்கொள்வதற்காகவும் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். உணவுப்பழக்கவழக்கங்கள் முதல் ஆடைத்தெரிவுகள் வரை காலநிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். ஆனால், வெப்பப் பேரிடர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானாதா? இந்தப் பேரிடரிலிருந்து எம்மைத் தற்காத்துக் கொண்டால் போதுமா? என்ற கேள்விக்குப் பதில் தேடவேண்டிய கட்டாயமும் இன்று எமக்கிருக்சின்றது.
எமது முன்னோரின் வாழ்வியல் தம்மைப் போலவே பிற உயிர்களை நேசிப்பதாகவும் இருந் தது. அதனால்தான் விலங்குகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஆயுரஞ்சிக்கல், தண்ணீர்த் தொட்டி என்பவற்றை ஊர்மனைகளிலும், நீர்நிலைகளை அண்டிய பகுதிகளிலும் பரவலாக அமைத்தார்கள். மாடுகள் முதலான விலங்குகள் தமது உடற்களைப்பையும், அலுப்பையும் போக்க உடலைத் தேய்ப்பதற்கு வசதியாகயே ஆவுரஞ்சிக்கற்கள் பயன்பட்டன. கோடைகாலங்களில் விலங்குகளின் தாகத்தைத் தணிக்க தண்ணீர்த் தொட்டிகளை அமைத்து, அவற்றை தினமும் நீரால் நிரப்பும் வழக்கமும் இருந்ததுகே குளங்களை அண்டிய தங்குமிடங்கள் என அனைத்தும் வழிப்போக்கர்களுக்கும் விலங்குகளுக்குமான காருண்ய எண்ணப்பாட்டை அடிப்படை யாகக் கொண்டு அமைக்கப்பட்டவைதான்.
தமிழர்களாகிய எமது பண்பாட்டில் ஜீவகாருண்யமும் இரண்டறக் கலந்தேயுள்ளது. ஆனால், இன்று அதைத் தொலைத்தபடி தாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பதுதான் பரிதாபகரமானது. இன்றோ, இயந்திரமயமாகிப்போன வாழ்க்கை முறையும், வர்த்தகத்தை முதன்மையாகக் கொண்ட உலக ஓட்டமும் 'ஜீவகாருண்யம்" என்பதையே முற்றிலுமாகச் சிதைத்துவிட்டன. இருந்த இடம் தெரியாமல் சிதைந்து சின்னாபின்னமாகிப்போன நிலையிலேயே ஆவுரஞ்சிக்கற்கள் இருக்கின்றன. கேணிகள் இருந்த இடங்களை இன்று திருமண மண்டபங்களும், கடைத்தொகுதி களும் ஆக்கிரமித்திருக்கின்றன. வணிகமும் நவீனமுமே எஞ்சிநிற்கின்றது. மறுபுறத்தில் வறட்சியைத் தாங்க முடியாது வாயில்லா ஜீவன்கள் வெப்பப் பேரிடரால் பேரின்னலை எதிர் கொண்ட படி அலைகின்றன.
இடர்மிகு காலநிலைகளில், வாயில்லா ஜீவன்களுக்கான செயற்றிட்டங்களுக்கு வெளிநாடுகளில் பஞ்சமேயில்லை. நாய்கள், டொல்பின்கள், பென் குயின்கள் என்று ஒவ்வொரு விலங்குகளைப் பாதுகாப்பதற்கும் தனித்தனியான அமைப்புகள்: கூட மேற்கத்திய தேசங்களில் இயங்குகின்றன. அவ்வாறாகஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகள் எம்மத்தியில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ளும் மாற்றம்கூட ஏதோவொரு உயிரை வாழவே வைக்கும். முற்றத்திலும், வீதியோரத்திலும் சிட்டுக்களுக்காகவும், ஆடு, மாடுகளுக்காகவும் நீர்நிரப்புவதுகூட இக்காலத்தில் பூர்வஜென்ம புண்ணியமே...
(25. 03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.