(ஆதவன்)
உக்ரைனுடனான அமைதிப் பேச்சை முன்னெடுப்பதற்குச் சாத்தியமில்லை என்று கிரம்ளின் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவ தற்குப் பல்வேறுபட்ட முயற் சிகளை சுவிட்ஸர்லாந்து மேற்கொண்டுள்ளது. ஜூன் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற வுள்ள இந்த அமைதி மாநாடு ரஷ்ய - உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைனில் அமைதிதிரும் புவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று ரஷ்யா தெரி வித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் நடை பெறும் அமைதிப் பேச்சுக்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை. ரஷ்யாவின் கோரிக்கைகள் முன்வைக்கப்படாத உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ரஷ்யாவின் நலனைப் பிரதிபலிப்பதாக அமையும் என்று ரஷ்யா நம்பவில்லை எனவும் கிரம்ளின் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.