புதியவன்.
பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ரமழான் மற்றும் பெருநாள் காரணமாக அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அயலுறவுத்துறை அமைச்சும் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகமும் முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.