மலைவிழுங்கி மகாதேவன் எண்டு மோசடி செய்யிறவையைச் சொல்லிறவை. இப்ப கன இடங்களில் மணல்விழுங்கி மகாதேவன்கள் தான் கூடுதலா இருக்கினம். கிளிநொச்சியில இருக்கிற கல்மடுக்குளத்தின்ர அணைக்கட்டில ஒரு உடைப்பைத் திருத்திறதுக்கு ஒரு கொம்பனிக்கு கொன்றாக்ட் குடுத்தவை. அப்பிடி உடைப்பை அடைக்கவேணும் எண்டா. அதுக்குத் தேவையான களிமண்ணை குளத்தை ஆழமாக்கி எடுத்துத்தான் செய்யிறவை யாம். எந்தளவுக்கு உடைப்பு இருக்கோ அதுக்குத் தேவையான மண்ணைக் குளத்தில இருந்து அந்த கொன்றாக்ட்காரர் எடுத்து, குளத்தைப் புனரமைக்க வேணும் எண்டதுதான் ஒப்பந்தம். அந்தக் குளத் தின்ர உடைப்பை அடைச்சு. புனரமைப்பும் நல்ல படியா முடிஞ்சிட்டுது. இப்ப அந்தக் கொன்றாக்ட்காரர் 'குளத்தை ஆழப்படுத்தேக்க வெளியில எடுத்த 3000 டிப்பர் மணலை (10ஆயிரம் கியூப்) நாங்களே விக்க விடோணும் எண்டு நிக்கினமாம்.
அந்தக் கொன்றாக்ட்காரர் உடைப்பை அடைக் கத் தேவையான மண்ணைத்தான் குளத்துக்கை இருந்து எடுக்கலாம் எண்டுதானே ஒப்பந்தம். அப்பிடித் தோண்டேக்க ஒண்டிரண்டு கியூப் மணல் கூட வாறது வழமைதான். ஆனால் இப்பிடி ஒரு உடைப்பைத் திருத்திறதுக்கு 3000 டிப்பர் மணலை குளத்துக்க இருந்து வெளியில் எடுக்கிறதெண்டால் அது வேணுமெண்டேதான் எடுபட்டிருக்கவேணும். இப்பிடி குளத்துக்கால எடுத்துக் குவிச்சுக்கிடக்கிற 3000 டிப்பர் மணலின்ர பெறுமதி7கோடிரூபாவுக்கும் கூடவாம். அதைத்தான் அப்பிடியே தங்களுக்குத் தரச்சொல்லி கொன்றாக்ட்காரர் கேட்டிருக்கினம்.
அவையள் தாங்கள் நினைச்சபடி குளத்து மண்ணை அள்ளியெடுக்கும் வரைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களக்காரர் பேய்க்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தவையோ? ஒரு வேலையை கொன் றாக்ட்காரரிட்ட குடுத்தால், அதை சம்பந்தப்பட்ட திணைக்களக்காரர் மேற்பார்வை செய்திருக்க வேணும். அப்பிடி மேற்பார்வை செய்யேக்க கட்டாயம் இப்பிடி அகிழான் கண்டபடி புத்தெடுத்தமாதிரி கொன் றாக்ட்காரர் மண்ணைக் கிண்டேக்கையே கண்டு பிடிச்சிருக்கலாம். இப்பிடி 3000 டிப்பரையும் தோண்டமுதல் ஆரம்பத்திலேயே அதை நிப்பாட்டியும் இருக்கலாம்.ஆனால் அவை அதைச் செய்யேலை. நீர்ப்பாசனத் திணைக்களக்காரரும் கொன்றாக்ட் காரரோட சேர்ந்துதான் இதை எடுக்க வெளிக்கிட்டிருக்கினம் எண்டு அங்கத்தைச் சனங்கள் குமுறுகினம்.
இப்ப சிறீதரன் எம்.பி.யிட்ட சனம் விசயத் தைச் சொல்ல, அவர் கடிதம் எழுதி கொன்றாக்ட்கார ருக்கு அந்த மணலைக் குடுக்கவேண்டாம் எண்டு உரியவைக்குச் சொல்லியிருக்கிறாராம். அதுக்குப் பிறகு அந்த ஏரியாவில உள்ள மீனவர் சங்கம் அந்த மணலை தங்களுக்குத் தரச்சொல்லிக் கேட்டிருக்கு. அந்தமணலை வித்து வாற காசில தங்கட ஏரியாவில உள்ள சின்னச்சின்ன திருத்தவேலையளைச் செய்யோணும் எண்ட நிபந்தனையோட அந்த மீனவ சங்கத்துக்குத்தான் மணலைக் குடுக்கப்போயினமாம்.
இந்த மணலை விழுங்க பிளான் போட்ட கொன்றாக்ட்காரருக்கு நீர்ப்பாசனத் திணைக்களக் காரர் மட்டுமில்லை, அந்த மாவட்டத்துக்கு முந்திப் பொறுப்பாயிருந்த அதிகார 'அம்மணியும் கடும் சப்போர்ட்டாம். அந்தத் துணிவிலதான் இப்பிடி மண்ணை விழுங்க நினைச்சிருக்கினம். கடைசியில அவையின்ர கனவில மண் விழுந்ததுதான் மிச்சம்.
(06.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.