(புதியவன்)
இலங்கையின் இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் காட்டுகிறது.
375 இராணுவ வீரர்கள், 25 கடற்படை வீரர்கள், 25 விமானப்படை வீரர்கள், மற்றும் 25 பொலிஸார் ஆகியோருக்கு செயற்கை கை கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது.
இதற்காக செயற்கை உடல், உறுப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.