(எழிலன்)
வலி வகைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க
ரணவக்க ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இன்று (20) இந்தக் குழு கூடிய போது அவரது
பெயரை வசந்த யாப்பா பண்டார முன்மொழிந்ததுடன் அதனை லசந்த அழகிய வண்ண வழிமொழிந்தார்.
வலி வகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி,
அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன, உதயன கிரிந்திகொட, சஞ்சீவ எதிரிமான்ன, நாலக பண்டார கோட்டேகொட ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு தலைவர்
தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார். குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தலைவர், இலங்கை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களினால் இடைநிலை வர்த்தகர்கள் 300%க்கும் அதிகமான இலாபம் பெறுவதாக சுட்டிக்காட்டினார். அதற்கமைய, அடுத்த
கூட்டத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து தரப்பினரையும் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றைய தினத்தில் குழுவுக்கு அனைத்து உறுப்பினர்களையும் அனுமதிப்பதாக தலைவர் தெரிவித்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.