வரலாற்றில் இன்று – 05.12.2023.
வரலாற்றில் இன்று – 05.12.2023.

 

புதியவன்

டிசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம்

நிகழ்வுகள்

1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.
1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.
1837 – இலங்கையில் முதலாவது சீனித் தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
1934 – இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.
1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 – பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 – அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 – ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.[2]
2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2005 – தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.
2013 – யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.

பிறப்புகள்

1782 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862)
1879 – பாகாஜதீன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (இ. 1915)
1890 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (இ. 1976)
1896 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1984)
1901 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (இ. 1966)
1901 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1976)
1905 – சேக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி (இ. 1982)
1919 – மொகிதீன் பேக், இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1991)
1927 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2016)
1927 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (இ. 2016)
1930 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 2001)
1960 – சரிகா, இந்தியத் திரைப்பட நடிகை
1966 – தயாநிதி மாறன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி

இறப்புகள்

1784 – பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)
1791 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)
1870 – அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)
1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, பதிப்பாளர் (பி. 1822)
1926 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)
1930 – ஆல்பிரட் பார்னார்டு பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)
1941 – அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)
1950 – அரவிந்தர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)
1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)
1963 – உசைன் சகீத் சுராவர்தி, பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)
1964 – வி. வீரசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1892)
1969 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (பி. 1885)
2009 – திலகநாயகம் போல், யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்
2012 – ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)
2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
2016 – ஜெ. ஜெயலலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, தமிழக முதலமைச்சர் (பி. 1948)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (சுரிநாம்)
உலக மண் நாள்
பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் [எ]

385 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.