எழிலன்.
மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவுச் சிலை மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நினைவுச் சிலையானது மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.