புதியவன்.
திருகோணமலை தி/கிண். அலிகார் மகாவித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(15) மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்றது.
தலைமைத்துவம், நேர முகாமைத்துவம், குழு செயற்பாடு, திறன் மற்றும் ஆளுமை அபிவிருத்தி, நன்னடத்தை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது வளவாளரினால் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இப்பயிற்சியில் திருகோணமலை மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் மு. மு. மு. ஸம்ஸீத் மற்றும் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.