மாதவன்.
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா ஆகியோர் சம்பூர் பொலிஸாரால் அநாகரிக முறையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமார் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.