பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் 23 லட்சம் பேர் வாழ்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் வான் தாக்குதலால் தங்கள் வீடுகளை விட்டு 3,39,000 பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் ஐ.நா பள்ளிகளுக்கு மூன்றில் இரண்டு பகுதி மக்கள் வந்துள்ளனர். அருகில் உள்ள பகுதிகளுக்கு மற்றவர்கள் சென்றுள்ளனர்.
எகிப்து அரசிடம் வான் தாக்குதலுக்கு பயந்து வெளியேறும் மக்களை எகிப்து பகுதிக்குள் அனுமதிக்கும்படி அமெரிக்கா கூறியது. ஆனால், எகிப்து அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. எகிப்து அரசு கூறுகையில், பாலஸ்தீன மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேறினால், அது இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிடும் என்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் காசா பகுதியில் பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும் என எகிப்து கூறி வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.