[புதியவன்]
போர் என்பது துயரக் கதைகளின் முழு உருவகம் என்றாலும் அதன் கூடவே வீரம், தேசப்பற்று, யுத்தக் களத்தில் பூத்த காதல், கனிந்த மனிதாபிமானம் என சில பல கதைகள் அவ்வப்போது அரும்புவதுண்டு. அந்த வரிசையில் இந்தக் கதை சற்று வித்தியாசமான கதை. கவனம் ஈர்த்த இறுதிச் சடங்கு பற்றிய கதை. இறந்தவன் போர் வீரன் அல்ல. ஒரு கவிஞன். கவிஞனாக எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட அந்த இளைஞன் தன் தாய்நாட்டைக் காக்க போரில் இணைந்து வீரமரணம் அடைந்துள்ளான். இது வீரமும், தியாகமும், ஞானமும் கலந்த கதை. இக்கதை நடந்தது உக்ரைன் நாட்டில். உக்ரைன் - ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் அந்த கவிஞன்!? - மேக்சிம் க்ரிவ்ட்ஸோவ். இதுதான் அந்தக் கவிஞனின் பெயர். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ரஷ்யாவிடமிருந்து க்ரிமியா பிரிந்தபோதிலிருந்து இவர் உக்ரைன் பாதுகாப்புக்காக போரில் ஈடுபட்டுவந்தார். பின்னர் சிறிது காலம் போரில் இருந்து ஓய்வு பெற்று பொதுச் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்தார். சமூக சேவைகள், எழுத்து என இருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் மீண்டும் ராணுவத்தில் இணைந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் திகதி நடந்த மோதலில் இவர் உயிரிழந்தார். பனிக்காலத்தில் ரஷ்யா தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் கார்கிவ் பகுதியின் குப்பியான்ஸ்க் எனுமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.