ஆதவன்
உமையாள் புரத்தில் தொடரும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு காவல் துறையினர் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்
கடந்த பத்தாண்டுகளாக உமையாள் புரத்தில் மணல் அகழ்வு தொடர்கின்றது. இது தொடர்பாக கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பல தடவைகள் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சில வேளைகளில் காவல் துறையினர் நடவடிக்கைகளில் இறங்கும் தகவல், மணல் கடத்தல் காரர்களுக்கு முற்கூட்டியே தெரிந்து விடுவதால் கடத்தல் காரர்கள் இலகுவாக தப்பித்துக்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.