வரலாற்றில் இன்று – 25.02.2024
வரலாற்றில் இன்று – 25.02.2024

(புதியவன்)   

(பெப்ரவரி 25  கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.)

*நிகழ்வுகள்

138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார்.
628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான்.
1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
1831 – உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்றது.
1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது.[1]
1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1843 – பெரிய பிரித்தானியாவின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.
1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
1856 – கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.
1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
1918 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.
1919 – அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.
1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1932 – இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார். இதன் மூலம் 1932 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார்.
1933 – ரேஞ்சர் என்ற அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1941 – நாட்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செருமனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டம் நகரில் பொதுப் பணி நிறுத்தம் இடம்பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி செருமனி மீது போரை அறிவித்தது.
1947 – புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.
1948 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
1954 – ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956 – பனிப்போர்: சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.
1964 – வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது.
1968 – வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1986 – பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து தமது 20-ஆண்டு ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.
1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
1994 – மேற்குக் கரை நகரான எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகை மசூதியில் இசுரேலியர் ஒருவர் சுட்டதில் 29 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலத்தீனர்களும் 9 இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சிற்கு அப்பால் எறியப்பட்டது.
2009 – வங்காளதேசம், டாக்கா நகரில் இராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – துருக்கி ஏர்லைன்சு விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வீழ்ந்ததில் ஒன்பது பயணிகளும், மற்றும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
2015 – ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.
 

*பிறப்புகள்
1304 – இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
1670 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1720)
1778 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)
1866 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (இ. 1952)
1869 – போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)
1885 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (இ. 1969)
1894 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1969)
1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961)
1901 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)
1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
1925 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)
1938 – பாரூக் இஞ்சினியர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1971 – சீன் ஆஸ்டின், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
1974 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (இ. 1993)
1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்
1982 – பிளாவியா பென்னட்டா, இத்தாலிய தென்னிசு வீராங்கனை
1994 – யூஜினீ பூஷார்டு, கனடிய தென்னிசு வீரர்
இறப்புகள்
1723 – கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
1877 – ஜங் பகதூர் ராணா, நேபாள ஆட்சியாளர் (பி. 1816)
1932 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
1936 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)
1942 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
1950 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
1965 – விராலிமலை சண்முகம், இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)
2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
2004 – பி. நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
2014 – பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசை அமைப்பாளர், கித்தார் கலைஞர் (பி. 1947)
2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
2015 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)
2015 – சுகுணா புருசோத்தமன், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1941)
2016 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
2017 – தவக்களை, தமிழ்த் திரைப்பட நடிகர்


*சிறப்பு நாள்
மக்கள் சக்தி நாள் (பிலிப்பீன்சு)
சோவியத் ஆக்கிரமிப்பு நாள் (ஜோர்ஜியா)
புரட்சி நாள் (சுரிநாம்) (ஐ)        

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #information

302 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.