(புதியவன்)
திம்புலாகல பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று வீடுகளை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
மானம்பிட்டிய காவற்துறையினரின் கருத்துப்படி, யானை வசிப்பிடத்தின் மதிலை இடித்ததில் எட்டு வயது மகள், நான்கு வயது மகன் மற்றும் அவர்களின் இருபத்தி ஆறு வயது தாய் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மனம்பிட்டிய மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இடிந்து விழுந்த செங்கல் சுவர்களின் தாக்கத்தால் குடும்ப உறுப்பினர்கள் தலை மற்றும் உடல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.