இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று சீனர்களால் 500 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் இராணுவ அதிகாரிகளுடன் அதிகளவான சீனர்களும் பங்குபற்றி இவ் உதவிகளை வழங்கி வைத்தனர்.
பாடசாலைப் பொதிகள் , உணவுப் பொதிகள் என வழங்கப்பட்ட நிகழ்வில் பெளத்த துறவிகள் பலரும் பங்குகொண்டிருந்ததோடு மாவட்டத்தின் மேலதிக அரச அதிபரும் கலந்துகொண்டிருந்தார்.
நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான சன்ஹாவோ கல்விக் காயம் முகாம் என சீன மொழியில் எழுதப்பட்ட பாடசாலைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.