காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்து வரும் நிலையில். சிரியா மீதும் குண்டுகளை வீசியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு அண்மையில் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதிலுக்கு கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா பகுதிக்கு குடிதண்ணீர், மின்சாரம் எரிபொருளை வழங்கும் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் தங்கள் நாட்டின் தலைநகர் மீது நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியிருப்பதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் விமானநிலையத்தின்மீதும் வடபகுதியிலுள்ள அலெப்போவிமானநிலையத்தின் மீதும் இந்தத் தாக்குதல் புரியப்பட்டுள்ளது என்று சிரியாவின் அரச செய்தி ஸ்தாபனமான 'சனா' தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தப் போக்கு நீடித்தால் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையை சிரியாவும் தொடங்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.