(ஆதவன்)
இந்த வருடத்துக்கான சிறந்த வன விலங்கு புகைப்படக் கலைஞர்கள் விருதை பிரிட்டனைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிமா சரிகானி ஒரு அமைதியான சூழலில் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் சுற்றுச்சூழலின் அழகு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நிமா சரிகானி நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக துருவக் கரடிகளைத் தேடி மூன்று நாள்கள் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்து இந்தப் புகைப்படத்தைப் பிடித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.