புதியவன்.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை(21) இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை - ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த போட்டிக்கு குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்சய மற்றும் நுவன் துஷார ஆகியோர் அணிக்குள் அழைக்கப்படவுள்ளதாகவும் தனஞ்சய டி சில்வா, மஹிஷ் தீக்ஷன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளாதாகவும் இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்போட்டியில் கமிந்து மெண்டிஸுக்கும் வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.