வரலாற்றில் இன்று – 02.04.2024
வரலாற்றில் இன்று – 02.04.2024

(புதியவன்)

ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார்.
1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார்.
1800 – பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது.
1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.
1801 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரித்தானியக் கடற்படை தென்மார்க்குக் கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.
1851 – நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1900 – புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1902 – உருசியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திறக்கப்பட்டது.
1911 – ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
1917 – முதல் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் செருமானியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.
1921 – இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
1930 – செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1972 – 1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லி சாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.
1975 – வியட்நாம் போர்: வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1]
1979 – சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி-ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.
1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 – கியூபாவுடனான உறவுகளை சீர் செய்யும் நோக்கில் பிடல் காஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கியூபாவின் அவானா நகரை வந்தடைந்தார்.
1992 – யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – இசுரேலியப் படைகள் பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து, பாலத்தீனப் போராளிகள் அங்கிருந்து விலகினர்.
2006 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய சுழற்காற்றினால் 29 பேர் உயிரிழந்தனர்.
2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
2011 – மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.
2012 – கலிபோர்னியாவில் ஒயிக்கோசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
2014 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில், இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
2015 – கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்


742 – சார்லமேன், புனித உரோமைப் பேரரசர் (இ. 814)
1566 – மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர் (இ. 1607)
1618 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663)
1647 – மரியா சிபில்லா மெரியன், செருமானிய-இடச்சு தாவரவியலாளர் (இ. 1717)
1725 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1798)
1788 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862)
1805 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1875)
1842 – தோமினிக் சாவியோ, இத்தாலியப் புனிதர் (இ. 1857)
1881 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1925)
1884 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர் (இ. 1944)
1891 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், கவிஞர் (இ. 1976)
1914 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (இ. 2000)
1924 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2001)
1942 – ரோஷன் சேத், இந்திய-ஆங்கிலேய நடிகர்
1969 – அஜய் தேவ்கான், இந்திய நடிகர்
1977 – மைக்கல் பாஸ்பெந்தர், செருமானிய-ஐரிய நடிகர்
1981 – மைக்கல் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1982 – டேவிட் ஃபெரர், எசுப்பானிய தென்னிசு வீரர்


இறப்புகள்


1672 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், புனிதர் (பி. 1654)
1872 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், தந்திக்குறிப்பைக் கண்டுபிடித்தவர் (பி. 1791)
1952 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (பி. 1897)
1973 – மு. தளையசிங்கம், இலங்கை எழுத்தாளர் (பி. 1935)
2005 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (பி. 1920)
2012 – எம். சரோஜா, தென்னிந்திய நகைச்சுவை நடிகை
2018 – வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1936)


சிறப்பு நாள்


பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

282 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.