(புதியவன்)
இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பனாகவும் பங்காளியாகவும் இந்தியா இருக்கும் என்று இலங்கைக் கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-இலங்கை பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"எங்கள் இரு தரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து பன்முகப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் தேசிய திறன்களால் இது வலுப்பெற்றுள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, ஆழமான பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம், முத லீடு, கலாசாரம், கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடம் உள்ள பல்வேறு துறைகளில் நாங்கள் இப்போது ஒத்துழைக்கிறோம். "இந்தியா -இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கையின் ஒரு விருப்பம் மட்டுமல்ல. நமது அயல் நாட்டுக்கு முன்னுரிமை என்ற தொலைநோக்கு பார்வையால் வழிநடத்தப்படும் ஒரு தேவையாகும்.
எங்கள் வளர்ந்து வரும் திறன்கள் நமது அயல் நாடுகளுக்கு பயனளிக்க வேண்டும். இலங்கை ஆயுதப் படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் உறுதியாக உள்ளோம்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.