(புதியவன்)
கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.
பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.
இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.
தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.