(புதியவன்)
கடந்த டிசம்பர் மாதம் மியான்மாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
15 இலங்கை மீனவர்களும் மியான்மார் அதிகாரிகளால் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மியன்மாரின் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இரண்டு மீன்பிடி படகுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.