வடக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் முதல் முறையாக வவுனியா வடக்கு வலய மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில தினப் போட்டிகள் நடைபெற்று அதன் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியாகின.அதன்படி ஆங்கில கட்டுரை எழுதுதல் போட்டியில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் மாகவித்தியாலய தரம் 12 மாணவி கி.கிருசாளினி மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு வலய மாணவி ஒருவர் ஆங்கில தினப் போட்டி ஒன்றில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.