ஆதவன்
புவியின் வெப்பநிலையைக் குறைத்து நேர்மறையான காலநிலை மாற்றத்தை உருவாக்குவதற்காகவும், அதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தயாரிப்பதற்காகவும் காலநிலைக்கான நீதிமன்றம்' ஒன்றை இலங்கையின் தலைமையில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியிருக்கின்றது கொழும்பு. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது அமர்வு கடந்த செப்ரெம்பரில் இடம்பெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பில் அந்த அமர்வில் விரிவானதும் தீவிரமானதுமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில், வல்லரசு நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச விதிமுறைகளை மீறுகின்றமையை வெளிப்படையாகவே கண்டித்திருந்தார். இது விடயத்தில் ஓர் உச்சப் பாய்ச்சலாகத்தான் இந்தக் 'காலநிலை நீதிமன்றம்' தொடர்பான முன்னெடுப்புகளைக் கொள்ளவேண்டியுள்ளது.
உலகளாவிய போரர்ப்பதற்றம், காலநிலை தொடர்பில் வல்லரசுகள் கொண்டிருக்கும் அசமந்தப் போக்கு மற்றும் பொருளாதாரச் சமநிலையற்ற வளப்பகிர்வு என்பன தீவு நாடுகளின் ஆயுளையும், வறியநாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பையும் 'முற்றாகத் தீர்மானித்துக்கொண்டி குக்கும் நிலையில், இலங்கையின் இந்த நடவடிக்கை பலநாடுகளால், அதிலும் குறிப்பாக துவாலு, மாலைதீவு போன்றதீவுநாடுகளால் மெச்சப்படுகின்றது பாராட்டப்படுகின்றது. தீவு நாடுகளின் இருப்பை உறுதிசெய்வதற்கான கோரிக்கையை மன்றாட்டமாக முன்வைத்துக் கொண்டிருக்காமல், உலக வல்லரசுகளுக்கு எதிராக நின்று அவற்றை நோக்கி நேர்பட விரல்நீட்டியிருக்கும் 'கெத்துக்காக' ஜனாதிபதி ரணிலை எத்தனை பாராட் டினாலும் அது தகும். அதேநேரம் ரணிலின் அரசியல் முதிர்ச்சி சர்வதேசப் பிணைப்பு அவருக்கு இருக்கக் கூடிய சர்வதேச அங்கீகாரம் போன்ற அம்சங்களையும் இந்த நகர்வுகள் கட்டியம் செய்கின்றன என்பதையும் ஏற்கத்தான் வேண்டும். ஜனாதிபதி ரணிலின் காலநிலை ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையும் இங்கே கோடு காட்டவேண்டிய விடயமாக அமைகின்றது.
ஆனால், ஒருதீவுநாடாக அழிவின் ஆபத்தம்சங்களை எதிர்கொண்டிருக்கும் தீவுத் தேசங்களின் பிரதிநிதியாக இலங்கையின் தார்மீக கோபத்தை, எவ்வளவுதூரம் சர்வதேசம் கண்டுகொள்ளப்போகின்றது என்ற கேள்வியும் இங்கே எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. ஏனெனில் அதிவேகத்தில் மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப்பணபலம் கொண்ட வல்லாதிக்கநாடுகள் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளுக்கான ஆரம்பப்புள்ளியைக்கூட கண்டடையவில்லை என்பதே. உண்மை. கார்பன் வெளியேற்றத்தாலும், பூமியை அதன் இயல்பு நிலையில் இருந்து கொஞ்சம்கொஞ்சமாக மாற்றுவிக்கும் சமூக விரோதச் செயற்பாடுகளாலும், மனிதகுலம் தன் இருப்பையே தொலைத்து வருகின்றது. இலங்கையின் குரலுக்கோ அல்லது இதரதீவுநாடுகளின் குரலுக்கோ கார்பனை அளவுகடந்து வெளியேற்றும் வல்லரசுகள் செவிசாய்க்கும் என்ற நம்பிக்கை தீவுத் தேசங்களிடம் கொஞ்சமும் இல்லை அந்தக் குணாம்சம் வல்லரசுகளிடம் இருந்திருந்தால் பூமியின் வெப்ப நிலையை 2 செல்சியஸால் குறைப்பது என்று 138 உலகத் தலைவர்களுடன் பரிஸில் எட்டப்பட்ட சர்வதேச உடன்பாடு நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்காது.
போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேசப் பொறிமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்படுவதுபோல் பருவநிலைப் படுகொலைகளுக்கு எதிராகவும் நீதி இறுக்கப்பட்டவேண்டும். இதற்காக உருவாக்கப்படும்? பிரத்தியேக நீதிமன்றங்களிடம் கொடுக்கப்படும் அதிகாரம்தான் தீவு நாடுகள் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த ஒரே வழி இல்லையேல், அந்தாட்டிக்கா பனிப் பாறைகள் உடைவதும், அதனால் ஏற்படும் நீருயர்வால் துவாலு உள்ளிட்ட தேசங்கள் தண்ணீரில் மூழ்குவதும் தவிர்க்கப்பட முடியாததே இன்னும் சொல்லப்போனால் எம் கண்முன்னே அவை நிகழும். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.