ஆண்களே! அதிகமான வெப்பகாலங்களில் உங்கள் சருமம் மீது அதீதஅக்கறை கொள்ளுங்கள்
ஆண்களே! அதிகமான வெப்பகாலங்களில் உங்கள் சருமம் மீது அதீதஅக்கறை கொள்ளுங்கள்

ஆண்களும் பெண்களைப் போலவே தங்களுடைய சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதை தான் விரும்புகிறார்கள். அப்படி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முதல்படி சருமத்தை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்வது தான். ஏனெனில் சருமத்தில் உள்ள அழுக்கு, தூசி, அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவை தான் பல்வேறு சருமப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. சருமத்தை சுத்தம் செய்ய ஆண்கள் பெரும்பாலும் சவர்க்காரம் பயன்படுத்துவார்கள். பெண்கள் நிறைய பேஸ்வாஷ்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்களுடைய சருமத்துக்கு பேஸ்வாஷ் சிறந்ததா அல்லது சோப் சிறந்ததா என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க...

   

ஆண்கள் சருமத்தைப் பரிமாரிக்க அதிகமாக மெனக்கெடுவதில்லை. ஆனால் நம்முடைய சருமம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமென்றால் ஓரளவு சருமத்தின் மீது அக்களை காட்டுவது தான் நல்லது. சோப்பை விட பேஸ்வாஷ் கொஞ்சம் விலையும் அதிகம் என்பதால் ஆண்கள் அதில் கவனமும் செலுத்துவதில்லை. உடலுக்கு சவர்க்காரம்பயன்படுத்தலாம். ஆனால் உடலைவிட முகத்தின் சருமம் மிகவும் சென்சிடிவ் தன்மை கொண்டது. அதில் அதிக ரசாயனங்கள் கொண்ட கடினத்தன்மை உடைய சவர்க்காரம் பயன்படுத்துவதை விட பேஸ்வாஷ் பயன்படுத்துவது தான் சிறந்தது.

​சோப் சருமத்தில் எப்படி வேலை செய்யும்?

முகத்துக்கு சவர்க்காரம் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சோப்புகளில் பயன்படுத்தப்படும் க்ளன்சிங் ஏஜெண்ட்டுகள் சருமத்தில் கடினத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

 

அதோடு சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை தக்கவைத்து சருமத்தின் பிஎச் அளவை பராமரிக்கச் செய்யும். அதேசமயம் சோப் அதிகமாக பயன்படுத்தும் போது சில சரும பாதிப்புகளும் உண்டாகக்கூடும்.

 

சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சரும வெடிப்புகள், அதிகப்படியான வறட்சி ஆகியவை ஏற்படக்கூடும். ஒருரவேளை நாளுக்கு நாள் உங்களுடைய சருமம் அதிகமாக வறட்சி ஆகிக்கொண்டே இருக்கிறதென்றால் சருமம் எளிதாக வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அதை தவிர்க்க சோப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.

 

​பேஸ்வாஷ் பயன்படுத்துவதன் நன்மைகள்

உடலின் மற்ற பாகங்களில் உள்ளதைவிடவும் முகத்திலுள்ள சருமப் பகுதி மெல்லியதாக இருக்கும். அதனால் சருமத்தில் பாதிப்புகள் ஏதேனும் ஏற்படும்போது சருமம் மிக வேகமாகவே சுருக்கங்கள் ஆகியவை ஏற்பட்டு வயதான தோற்றத்தை அடைந்துவிடும்.

 

அதோடு மட்டுமின்றி முகம் அழுக்குகள், மாசுக்கள் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றுடன் நேரடியாகத தொடர்பு கொண்டிருக்கிறது. அதோடு பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக வியர்வை உண்டாவதால் சருமத்தில் எண்ணெய்ப் பசையும் அதிகரிக்கும்.

 

சருமத்துக்கு பேஸ்வாஷை தேர்ந்தெடுக்கும்போது நம்முடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்றபடி சரியான பேஸ்வாஷ்களைத் தேடிப் பயன்படுத்த முடியும். சருமத்தின் பிரச்சினைக்கு தகுந்தபடி பேஸ்வாஷ்களைத் தேர்வு செய்ய முடியும்

 

 

 

 

 

 

 

309 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.