ஆதவன்.
முல்லைத்தீவு ஊடக அமையத் தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலனுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் 28ஆம் திகதி விளக்கத்துக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கோத்தாபய கடற்படை முகாமின் கடற்படைப் புலனாய்வு அதிகாரி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தவசீலன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இடம் பெற்று வருகின்ற போதிலும் முறைப்பாட்டாளரான கடற்படைப் புலனாய்வதிகாரி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வருகை தருவதைத் தவிர்த்து வந்தார். இதையடுத்து கடற்படைப் புலனாய்வதிகாரியையும் அவரது சாட்சியையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கடந்த 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் டது. ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். குறித்த கடற்படைப் புலனாய்வாளரும் வருகைதந்திருந்தார். ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விளக்கத்துக்காக மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.