(ஆதவன்)
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு வவுனியாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில், இலங்கைக்கு அவர்கள் மீளத் திரும்பியிருந்தனர்.
அவ்வாறு திரும்பிய குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் இலங்கைக் குடியுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.