வரலாற்றில் இன்று – 09.03.2024
வரலாற்றில் இன்று – 09.03.2024

(புதியவன்)  

மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார்.
1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.
1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார்.
1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.
1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.
1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
1841 – தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[1]
1842 – கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.
1896 – ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.
1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.
1923 – விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.
1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957 – அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
1960 – பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.
1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.
1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
1977 – இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
1997 – சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.
2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
2012 – காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இசுரேல் நோக்கி ஏவப்பட்டன.


பிறப்புகள்


1454 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நிலப்படவரைஞர், நாடுகாண் பயணி (இ. 1512)
1564 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. 1617)
1568 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (இ. 1591)
1818 – செயிண்ட் கிளெயர் டிவில்லி, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1881)
1928 – மார்ட்டின் க்ராம்பன், செருமானிய குறியீட்டியல் வல்லுநர் (இ. 2015)
1929 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவர் (இ. 2013)
1931 – கரண் சிங், இந்திய அரசியல்வாதி
1934 – யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (இ. 1968)
1943 – பாபி பிசர், அமெரிக்க சதுரங்க வீரர் (இ. 2008)
1951 – சாகீர் உசைன், இந்திய தபேலா இசைக்கலைஞர்
1954 – டி. எல். மகராஜன், தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர்
1954 – பொபி சான்ட்ஸ், ஐரியக் குடியரசுப் படைத் தன்னார்வலர் (இ. 1981)
1956 – சசி தரூர், இந்திய அரசியல்வாதி
1957 – பி.சீ மையேர்சு, அமெரிக்க உயிரியலாளர்
1959 – தக்காக்கி கஜித்தா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
1970 – நவீன் ஜின்டால், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
1974 – ஜோஷ்வா ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1979 – ஆஸ்கர் ஐசக், குவாத்தமாலா-அமெரிக்க நடிகர்
1985 – பார்தீவ் பட்டேல், இந்தியத் துடுப்பாளர்


இறப்புகள்


1825 – அன்னா லெத்திசியா பார்பௌல்டு, ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1743)
1847 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லுயிரியாளர் (பி. 1799)
1851 – ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1777)
1857 – தோமினிக் சாவியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1842)
1926 – மிக்கோ உசுயி, ரெய்கி பயிற்சி முறையை உருவாக்கிய சப்பானிய ஆன்மிகத் தலைவர் (பி. 1865)
1936 – யுக்தேஷ்வர் கிரி, இந்திய யோகி (பி. 1855)
1941 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியலாளர் (பி. 1851)
1952 – அலெக்சாண்டிரா கொலோண்டை, உருசியப் பெண் புரட்சியாளர் (பி. 1872)
1970 – எஸ். இராமநாதன், தமிழக பெரியாரியக்க செயற்பாட்டாளர் (பி. 1895)
1988 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசையமைப்பாளர் (பி. 1925)
1992 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
1994 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1908)
1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (பி. 1972)
2003 – வீ. ப. கா. சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவர் (பி. 1915)
2005 – எம். பழனியாண்டி, இந்திய அரசியல்வாதி (பி. 1918)


சிறப்பு நாள்


ஆசிரியர் நாள் (லெபனான்)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #information

259 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.