ஆதவன்
காஸாவுக்குள் உதவித்திட்டங்களைக் கொண்டுசெல்வ தற்காக, கடல்வழி வழித்தடமொன்று ஓரிரு தினங்களுக் குள் உருவாக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
காஸாவில் கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் தீவிரமான மோதல் இடம்பெற்று வருகின்றது. இதனால் வரலாறு காணாத மனிதப் பெருநெருக்கடியும் பஞ்சமும் காஸாவை ஆட்கொண்டுள்ளது. காஸாவுக்குள் நிலவழியாக உதவித் திட்டங்கள் செல்வதற்கு இஸ்ரேல் பல்வேறுபட்ட தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ள நிலையில் கடல் வழியாக உதவித்திட்டங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
காஸாவில் தற்காலிகத் துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரச தலைவர் பைடன் கருத்துத் தெரிவித்து 24 மணிநேரத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் கடல்வழியான தனது உதவித்திட்டங் களை அறிவித்துள்ளது.
காஸாவுக்காகத் திரட்டப்பட்ட உதவித்திட்டங்கள் சைப்ரஸில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் ஓரிரு தினங்களில் கடல்வழியாக காஸாவைச் சென்றடையும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.