(ஆதவன்) (ஏ)
சீனா சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைத் தொடர்ந்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிச்சுவான் மாகாணத்தில் பைசி என்ற கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தக் காட் டுத்தீ விரைவாக பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 60 ஹெலிகொப்டர்களிலும், விமானங்களிலும், தீயணைப்பு வாகனங்களிலும் தீய ணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடுகின்ற போதிலும் தீ இன்னமும் கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்தே முன்னேற்பாட்டு நடவடிக்கையாக 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயால் இதுவரை மனித உயிரழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை.
அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.
பெருமளவு பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.