(புதியவன்)
இன்று (29) அதிகாலை 4.45 மணியளவில் இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதையறிந்து உடனடியாக செயற்பட்ட சிவனொளிபாதமலை பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பள்ளத்தில் வீழ்ந்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இந்தியாவின் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.