வவுனியா இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலம் காணாமற்போயுள்ள நிலைமையில் அதனை மீள ஒப்படைப்பவருக்கு 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் குடும்பத்தினர் ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் சிறுமியின் பாட்டியால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சிறுமி நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. தற்போது சிறுமியின் உடல் அடையாளம் தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் 0766091158 அல்லது 0754986953 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினால் 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும். அதேவேளை சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் பாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.