மாவட்டத்தில் இன்று சில பகுதிகளில் 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார், முருங்கன் நகர், பள்ளிமுனை, எழுத்தூர், வங்காலை, அடம்பன் ஆகிய பிரதேசங்களிலும், அவற்றை அண்மித்த பிரதேசங்களிலும் தோட்டவெளி, சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, திருக்கேதீஸ்வரம், நாகதாழ்வு உள்ளிட்ட பகுதிகளிலும் இவ் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர் விநியோகத்தடை நடைமுறையிலிருக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.